2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுமுறிப்புக் குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்திலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச்சேர்ந்த ப.டனுசன் (வயது 25) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

ஆட்டோ உரிமையாளரான குறித்த இளைஞரின் ஆட்டோவை, வாடகைக்கு அமர்த்திய சிலரை ஏற்றிக் கொண்டு நேற்று (21) மாலை சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (22) இளைஞரின் சடலம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .