2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’புனித சூசையப்பர்’ வாசப்பு நாட்டுக்கூத்து

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட  அச்சங்குளம் கிராமத்தில், கிறிஸ்தவ பாரம்பரிய கலைகளில் ஒன்றான புனித சூசையப்பர் வாசப்பு நாட்டுக்கூத்து, நேற்று வெள்ளிக்கிழமை (21) இரவு 7.30 மணியளவில் அச்சங்குளம் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக  நுண் கலைப்பீட பேராசிரியர் எஸ்.சந்திரகுமார் , வட மாகாணசபை உறுப்பினர் பிரிமுஸ் சிராய்வா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கலைஞர்களும் கிராமத்தின் பெரியவர்களும் விழாக்குழுவால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர், மட்டக்களப்புக்கும் மன்னார் மாவட்டத்துக்கும் கலைகளினூடாக நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கலைப்பீட மாணவர்கள் அதிகமாக மன்னார் மாவட்டத்தில் உருவாக்கம் பெற்ற பாரம்பரிய கலைக்கூத்துகளை ஆராய்ந்து கற்பதில் பெரும் விருப்பம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த வாசகப்பு நாட்டுக் கூத்தானது, சுமார் 40 வருடங்களின் பின், அச்சங்குளம் கிராமத்ததுக் கலைஞர்களால் அரங்கேற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .