2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெற்றோரை இழந்து 31 சிறுவர்கள் நிர்க்கதி

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற 8,203 சிறுவர்களில், தாயையும் தந்தையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனரென, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள்  325 பேரும், தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் 40 பேரும், தந்தையைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 12 பேரும், மாற்று வலுவுள்ள சிறுவர்கள் 65 பேரும், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் 03 பேரும், சிறுவர்கள் இல்லங்களில் 96 சிறுவர்களும், சீர்திருத்தப் பாடசாலைகளில் 13 சிறுவர்களும் உள்ளனர் எனவும், பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X