2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பேசாலையில் சிறுவனின் சடலம் மீட்பு

Editorial   / 2019 மே 15 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 

மன்னார் – பேசாலை, 7ஆம் வட்டாரம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (12), 12 வயது சிறுவனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பேசாலை, 7ஆம் வட்டாரம், யூட் வீதியைச் சேர்ந்த பிறின்ஸ்டன் ரயனா (வயது 12) என, பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, குறித்த சிறுவனின் சடலத்துக்கு அருகில் இருந்து, 8ஆம் திகதி என திகதியிடப்பட்ட கடிதமொன்றும், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுவனின் மரணத்தில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாக, குறித்த சிறுவனின் உறவினர்கள், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .