2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொது மன்னிப்பு வழங்குமாறு, இந்து குருமார் பேரவை கடிதம்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 மார்ச் 27 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்யக் கோரி மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையால் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவுக்கு நேற்று(26) கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

அண்மையில் கிளிநொச்சியில் இரு பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார். அவரது கணவராக அரசியல் கைதி ஆனந்த சுதாகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் அவரின் இரு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் குறித்த இரு குழந்தைகளின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு நாட்டின் ஜனாதிபதியான உங்களின் அதிகார தத்துவத்தின் பிரகாரம் ஆனந்த சுதாகரனுக்கு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X