2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மண்டிகைக்குளத்தை மையப்படுத்தி சூழல் சுற்றுளாத்தளம்

Editorial   / 2017 நவம்பர் 25 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

சங்கானை -  மண்டிகைக்குளத்தை மையப்படுத்திய சூழல் சுற்றுளாத்தளமாக விரைவில் மாற்றப்படவுள்ளது. கமலநல திணைக்கள உதவி ஆனையாளர் இதற்க்கான அனுமதியை அளித்ததன் பேரில் இந்தத் திட்ம் விரைவில் நிறைவேறும்  என, வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி எஸ்.பிறேமினி தெரிவித்தார்.

சுற்றுலா தொடர்பான அபிவிருத்திக் கூட்டமும் விவசாயக் கூட்டமும் அண்மையில் இடம்பெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மண்டிகைக் குளப் பிரதேசம் பிரதான வீதியுடன் இணைப்பாக உள்ளது. இந்தப் பிரதேசம் நவீன சுற்றுலாத்தளமாக மாற வேண்டும் என சங்கானை பொது அமைப்புகளும் விவசாய சம்மேளனப் பிரதிநிதிகளும் வர்த்தகர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

“எனவே இந்தத் திட்டத்தை  முன் நகர்த்துவது தொடர்பில் திட்ட முன் மொழிவு முன் வைக்கப்பட்டு கமல நல உதவி ஆணையாளரின் ஒத்தாசையுடனும் ஏனைய அரச நிறுவனங்களின் உதவியுடனும் குளத்தை நவீன சுற்றுலாத் தளமாக மாற்றுவோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .