2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மண்ணுக்குள் இருந்து கஞ்சா மீட்பு

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்  

 புதுக்குடியிருப்பு - சுண்டிக்குளம் கடற்கரைப் பகுதியில், மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட சுமார் 6 கிலோகிராம் கஞ்சா பொதிகளை, புதுக்குடியிருப்பு பொலிஸார், நேற்று (25) இரவு கைப்பற்றியுள்ளனர். 

இதன்போது, சந்தேகத்தின் பேரில், வவுனியா பகுதியைச் சேர்ந்த 26, 39, 41 வயதுகளுடைய 3 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  

 இவ்வாறு கைதுசெய்யப்ப ட்டவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  

மீட்கப்பட்ட கஞ்சா, சுமார் எட்டு இலட்சம் தொடக்கம் பத்து இலட்சம் ரூபாய் வரை பெறுமதியுடையதென, பொலிஸார் கூறினர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .