2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மதிப்பளிக்கும் நிகழ்வு

Editorial   / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணிம் பாஸ்கரன்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஏற்பாட்டில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள பாரம்பரிய கலைஞர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

தமிழர்களுடைய பாரம்பரிய கலை, பண்பாட்டு, விழுமியங்கள் அழிவடைந்து செல்கின்ற தற்காலகட்டத்தில் அந்தக் கலைகளை பாதுகாக்கின்ற கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் மதிப்பளிக்கபட வேண்டியவர்கள் என்கின்ற என்னப்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினால்  குறித்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனுடைய தலைமையில் இயக்கச்சி முள்ளிப்பற்று உப அலுவலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோருடன் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன்,  உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன்  கரைச்சி என பலரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .