2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மன்னாரில் கையெழுத்து வேட்டை

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

“மன்னாரின் எழுச்சி, அதுவே எங்களின் முயற்சி” எனும் கருப்பொருளில், மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்த கையெழுத்து வேட்டை, மன்னார் பஸார் பகுதியில், மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் இயக்குநர் வை.கஜேந்திரன் தலைமையில், இன்று (02) காலை இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்துக்கு வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட வேண்டும், மணிக்கூட்டுக் கோபுரம் அமைக்கப்பட வேண்டும், மின் சமிக்ஞை விளக்குகள் பொருத்தப்பட வேண்டும், மன்னார் பொது நூலகத்தைச் சிறப்பாக உருவாக்க வேண்டும், கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களைத் தரமுயர்த்த வேண்டும், மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறித்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கையெழுத்து வேட்டையை, சர்வ மதத்தலைவர்கள் இணைந்து, வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .