2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஸ்தானுக்கு கருத்திட்ட துரிதப்படுத்தல் அதிகாரம்

Editorial   / 2019 மார்ச் 11 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

ஜனாதிபதி செயலகத்தால், தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் கிராம சக்தி, சிறுநீரக நோய்த் தடுப்பு, தேசிய போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு, தேசிய உணவு உற்பத்தி, சுற்றாடல் பாதுகாப்பு, நிலைபேறான அபிவிருத்தி, ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா போன்ற தேசிய செயற்றிட்டங்களை, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப் படுத்துவதற்கான அதிகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமையவே, மேற்படி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் வாழ்ந்துவரும் மக்களின் இயல்பு நிலையைக் கருத்திற்கொண்டு, மேற்படி செயற்றிட்டங்களை, கட்சி - பேதம் கடந்து முன்னெடுக்கும் முகமாகவே, இந்த அதிகாரம், அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .