2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மாங்குளம் பிரதேசத்தில் மழையுடன் கூடிய சுழற்காற்று

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாங்குளம் பிரதேசத்தில் வறட்சியின் நடுவே, மழையுடன் கூடிய சுழற்காற்றினால் அனர்த்தம் ஏற்பட்டது. நேற்று (25) மாலை 4.30 மணியளவில், மழையுடன் சேர்ந்து சுழற்காற்று வீசியதால், பத்துக்கும்  மேற்பட்ட வீடுகள், சேதமடைந்துள்ளதுடன், மரங்கள் முறிந்து விழுந்ததால், ஒருசில வீடுகள் கடும் சேதத்துக்குள்ளாகியுள்ளன.

வன்னி பிரதேசம்  எங்கும் வறட்சி நிலவி வரும் நிலையில், வறட்சியை ஊடறுத்த சுழற்காற்றுடனான மழை, இவ் அனர்த்தத்தை ஏற்படுத்தியது. அனர்த்தம் தொடர்பில், நேரில் பார்வையிட, இன்று காலை (26), சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு மாவட்ட இணைத்தலைவர் எம்.பி.சி.சிவமோகன், இது தொடர்பில்   அனர்த்த முகாமைத்துவ  பணிப்பாளருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருக்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X