Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2,892 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதுடன் இவர்களில் 283 பேர், பார்வை இழந்த நிலையில் உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலகத் தகவல் தெரிவித்துள்ளது.
95 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டம், பல முறை இடப்பெயர்வுடன் கூடிய பொருளாதார இழப்புக்களை சந்தித்துள்ளது.
உறவுகளின் உயிரிழப்புக்களுடன், தங்கள் உடல் உறுப்புகளை இழந்த நிலையில், பல்வேறு வகையான பாதிப்புக்களையும், மன உளைச்சல்களையும் சுமந்தவாறு பலர் இன்று வாழ்ந்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச செயலகப் பிரிவுகளில், தமது ஒரு கண்ணை இழந்த நிலையில் 240 பேரும், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் 43 பேரும் உள்ளனர்.
கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் ஒரு கண்னை இழந்த நிலையில் 49 பேரும், இரண்டு கண்களையும் இழந்த நிலையில் 12 பேரும் என, மொத்தம் 61 பேர் உள்ளனர்.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவில், 40 பேர் தமது ஒரு கண்னை இழந்த நிலையிலும், இரண்டு கண்களை இழந்த நிலையில் 13 பேருமாக மொத்தம் 53 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் தமது ஒரு கண்ணை இந்த நிலையில் 42 பேர் வாழ்ந்து வருகின்றனர்.
கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவில் 108 பேர் தமது ஒரு கண்னை இழந்த நிலையிலும், 18 பேர் தமது இரண்டு கண்களையும் இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என, மாவட்டச் செயலகத் தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
8 hours ago
8 hours ago
19 Apr 2024