2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘மீனவர்களை, முப்படையினரும் தேடி வருகின்றனர்’

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 14 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நாயாற்று பகுதியில், தொழிலுக்கு சென்று காணாமற்போன 3 மீனவர்களையும் கடற்படையினர், இராணுவ அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து தேடி வருவதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 12ஆம் திகதி அதிகாலை நாயாற்று பகுதியில், தொழிலுக்குச் சென்ற சிலாபத்தைச் சேர்ந்த மில்ராஜ் மிரண்டா (வயது 51), இமானுவேல் மிரண்டா (வயது 48), மிதுறதன் மிரண்டா (வயது 24) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் காணாமல் போயிருந்தனர்.

நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் சென்று தேடுதல் நடாத்தியபோதும், குறித்த மூவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து, குறித்த மீனவர்களை மீட்க கடற்படையினர் உதவி புரிய வேண்டும் என நாயாற்று பகுதி மீனவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த மீனவர்களை கடற்படையினர், இராணுவ அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, வான் படையினரின் உதவியையும் கோரியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X