2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முகமாலைப் பகுதிக்கு ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதி விஜயம்

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா, எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

நிலக்கண்ணிவெடிகளை அகற்றுவதுக்கு பொறுப்பாகவுள்ள ஐ.நாவின்  சிறப்புப் பிரதிநிதியும், ஜோர்தானின் இளவரசருமான மிரேந் அல்குஷேன் முகமாலைக்கு இன்று (06) விஜயம் மேற்கொண்டு கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களை பார்வையிட்டுள்ளார்.

குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், அதிகாரிகளுடன் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2 நாட்களாக  கண்ணிவெடி அகற்றும் பணி நடைபெறும் இடங்களை பார்வையிட்டு வருவதாகவும், கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்படாத பிரதேசங்களில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கண்ணிவெடிகள் அகற்றப்படும் எனவும்  அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவ் விஜயத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதனும்  கலந்துகொண்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .