2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவில் 48 வீடுகள் சேதம்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், சனிக்கிழமை (23) வீசிய கடும் காற்று காரணமாக 14 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 18 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில், நேற்று (24) மாலை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக,  ஒட்டுசுட்டான் மற்றும் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில், 19 வீடுகள் சேதமடைந்துள்ளன.

 பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிவருவதாக, பிரதேச சபை உறுப்பினர் க.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .