2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முல்லைத்தீவில் கையெழுத்துவேட்டை

Editorial   / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

“போதைப்பொருள் அழிவைத் தடுப்போம் இளம் தலைமுறையினை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில், சர்வதேச மகளிர் தினத்தன்று, 50 ஆயிரம் கையெழுத்துக்களுடன் அரச தலைவருக்கு கையளிக்கும் மக்கள் மனு ஒன்றின் கையெழுத்து நடவடிக்கைகள், நேற்று முன்தினம் (21)  முல்லைத்தீவு நகர்பகுதியில் நடைபெற்றது.

தேசிய  மீனவ ஒத்துளைப்பு இயகத்தின் அனுசரணையில் தேசிய மீனவ பெண்கள் சம்மேளனம், மாவட்ட மீனவ ஒத்துளைப்பு இயக்கம் ஆகியன இணைந்து முல்லைத்தீவு நகரின் பல பகுதிகளில் கையெழுத்து நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள்.

இந்தக் கையெழுத்து நடவடிக்கை அரச அதிகாரிகளின் அனுமதியுடன் பாடசாலை மாணவர்களிடமும் பெறவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .