2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் பதட்டம்

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் உள்ள நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொதுமக்கள் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட நிலையில், அங்கு வந்த பௌத்த துறவிகள் அதனை தடுக்க முற்பட்டமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அங்கு வந்த முல்லைத்தீவு பொலிஸார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையினை பாதுகாப்போம் என்ற ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து செயற்படும் ஒரு பௌத்த அமைப்பினை சேர்ந்த 40 ற்கும் மேற்பட்டவர்களே குறித்த நீராவியடிப்பிள்ளையார் ஆலயப்பகுதிக்கு சென்று குழப்ப நிலையினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .