2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’முல்லைத்தீவுக்கு இவ்வாண்டில் பஸ் நிலையம் இல்லை’

Kogilavani   / 2017 ஜூன் 28 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவுக்கு நிரந்தர பஸ் நிலையமொன்றை நிர்மாணிப்பது, இவ்வாண்டில் சாத்தியப்படாதென, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

'முல்லைத்தீவு பஸ் நிலையம் அமைந்துள்ள காணி  பள்ளமாகக் காணப்படுவதன் காரணமாக, நகர அபிவிருத்தி சபையினால் அதனை நிரப்பும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த காணியின் வேலைகள் நிறைவடைந்ததும், பஸ் நிலையம் அமைப்பதற்கான திட்டத்தினை கொழும்புக்கு அனுப்பி, அதற்கான நிதி கிடைத்தவுடன் வேலைகள் தொடங்கப்படும். அதற்கான முயற்சிகளையே தற்போது மேற்கொண்டுள்ளோம்' எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு அருகில், அடிப்படை வசதிகளற்ற முறையில், பஸ் நிலையம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X