2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முல்லையில் கையெழுத்து போராட்டம்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரி சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள கையெழுத்துப்போராட்டம் முல்லைத்தீவில்  இன்று (28)இடம்பெற்றது.

இலங்கை அரசாங்கத்துக்கு ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட கால அவகாசத்தில் 1 வருடம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், இன்னும் ஒரு வருடத்தை வீணடிக்காது, இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நியாயாதிக்கத்தை அளிக்கும் தீர்மானத்தை அல்லது விசேட சர்வேதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை உருவாக்கும் தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புச்சபை நிறைவேற்ற வேண்டும் என கோரியே குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .