2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முள்ளிவாய்க்காலில் இருந்து பயணத்தை ஆரம்பித்த சி.வி

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன், எஸ்.நிதர்ஷன்

நாடாளுமன்றத் தேர்தலில், யாழ். தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவான முன்னாள் முதலமைச்சரும் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன், தனது அரசியல் பயணத்தை, 2009ஆம் ஆண்டு இறுதி போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தவர்கள் நினைவாக, முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவு முற்றத்தில் சுடர் ஏற்றி, மலர்தூவி வணக்கம் செலுத்தி தனது அரசியல் பயணத்தினை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டு, முள்ளிவாய்க்கால் நினைவு சிலைக்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .