2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மெனிக்பாமில் சடலம் மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில், இன்று அதிகாலை நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞன் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவத்தில், மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பா. நிரோஜன் (வயது 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .