2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேலும் 5 நெல் உலரவிடும் தளங்கள் ​

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மேலும் 5 இடங்களில் நெல் உலரவிடும் தளங்களை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதென, மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் அ.அற்புதராஜா தெரிவித்தார்.

இதற்கமைய, 5 இடங்களில் தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, ஒப்பந்ததாரர்களிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தண்ணிமுறிப்பு, ஐயன்கன்குளம், பாலிநகர், கொல்லவிளாங்குளம், முறிப்பு ஆகிய பகுதிகளில், தலா 5 இலட்சம் ரூபாய் செலவில், நெல் உலரவிடும் தளங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் இந்தத் தளங்களை,, இரண்டு மாதங்களுக்குள் அமைத்துக்கொடுக்குமாறு, ஒப்பந்ததாரர்களைப் பணித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .