2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மேழிவனம் சிறுவர்களுக்கு போஷாக்கு இல்லை

Editorial   / 2019 மே 14 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு - மேழிவனம் பகுதியில், குடும்ப வறுமை, தொழில் வாயப்பின்மை போன்ற காரணங்களால், அதிகளவான சிறுவர்கள் போஷாக்கற்ற நிலையில் காணப்படுவதாக, கிராம மட்ட அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

90 சதவீதமான குடும்பங்கள், தொழில் வாயப்பற்ற நிலையில், அன்றாடம் கூலிவேலை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே, தமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில், எந்தவித வேலைவாய்ப்புகளும் இன்றி, ஒரு நேர உணவுக்கே பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், கூடுதலான சிறுவர்கள் போதிய போஷாக்கற்ற நிலையில் காணப்படுகின்றனர்.

இது தொடர்பில் பலரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதும், இதுவரை எந்தவிதத் தீர்வுகளும் கிடைக்கவில்லையென, மேற்படி கிராம மட்ட அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X