Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா - ஓமந்தை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பை குளத்தில், நேற்று காலை யானைகுட்டி ஒன்றின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளத்தில் மூழ்கி கிடந்த யானைக் குட்டியின் உடலத்தை அவதானித்த ஊர்வாசிகள், அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, இது தொடர்பில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக் குட்டியின் உடலத்தை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடலம், சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சட்ட வைத்திய அறிக்கையின் படி, வெங்காய வெடி என்று அழைக்கப்படும் வெடிபொருளைக் கொண்டே, குறித்த யானைக் குட்டி கொலைசெய்யப்பட்டிருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago