2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானைகளாலும் குரங்குகளாலும் பேரழி

Editorial   / 2019 மார்ச் 28 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு – மாந்தைக் கிழக்கில் யானைகளாலும் குரங்குகளாலும் விவசாயத்துறை பேரழிவுகளை எதிர்கொண்டு வருவதாக விவசாயிகளால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டின் பின்னர் யானைகளாலும் குரங்குகளாலும் தொடர்ச்சியாக பயிர்ச் செய்கை பேரழிவுகளை எதிர்கொண்டு வருவதாகவும் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களில் குரங்குகளையும் யானைகளையும் கட்டுப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை இல்லை.

இதனால் விவசாய முயற்சிகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் மாந்தைகிழக்கில் யானைகளையும் குரங்குகளையும் கட்டுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்யவில்லை எனவும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .