2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வட மாகாணத்துக்கு புதிய தாதிய உத்தியோகத்தர்கள், வைத்திய நிபுணர்கள்’

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் புதிய தாதிய உத்தியோகத்தர்கள் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ. குணசீலன் தெரிவித்தார்.

வட மாகாணத்துக்கென தெரிவு செய்யப்பட்ட 71 தாதிய உத்தியோகத்தர்களுக்கும் இன்று திங்கட்கிழமை (17) காலை வடமாகாண சுகாதார அமைச்சில் வைத்து நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ், மாவட்டத்துக்கு 24 தாதிய உத்தியோகத்தர்களும்கிளிநொச்சி மாவட்டத்துக்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் மன்னார் மாவட்டத்துக்கு 13 தாதிய உத்தியோகத்தர்களும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 10 தாதிய உத்தியோகத்தர்களும் வவுனியா மாவட்டத்துக்கு 12 தாதிய உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜீ. குணசீலன் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக நிலவி வந்த மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுனர் வெற்றிடத்துக்கு வைத்திய நிபுணர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு காது, மூக்கு, தொண்டை போன்றவற்றுக்கான விசேட வைத்திய நிபுணர் ஒருவரும் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜீ. குணசீலன் தெரிவித்தார்.

இதேவேளை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றைத் தொடர்ந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மீண்டும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையில் ஈடுபடுத்த வட மாகாண சுகாதாரத் திணைக்களம், தான் மத்திய சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்த நிலையில் குறித்த மகப்பேற்று வைத்திய நிபுணரை உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்று கடமையை பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு மத்திய சுகாதார அமைச்சு குறித்த வைத்திய நிபுணருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஒரு சில தினங்களில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மகப்பேற்று வைத்திய நிபுணர் கடமையில் ஈடுபடுவார் எனவும் ஜீ. குணசீலன் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .