2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் அடிக்கல் நாட்டல்

Editorial   / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பகல் நேரப் பராமரிப்புடன் கூடிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வவுனியா – வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்துக்கு அருகாமையில், இன்று (03) நடைபெற்றது.

இதன்போது வவுனியா  மாவட்டச் செயலாளர் சமன்பந்துலசேன ,  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டிவைத்தார்.

இந்தக் கட்டடம், மகளிர், சிறுவர் விவகார அமைச்சின், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் வவுனியா மாவட்டச் செயலகத்தின் பங்களிப்புடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது.

5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இங்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .