2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வவுனியாவில் கைக்குண்டு மீட்பு

Editorial   / 2020 மார்ச் 17 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - மாமடு பகுதியில், இன்று (17) காலை, வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக, மாமடு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - மாமடு நெடுங்குளம் பகுதியில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த பொதுமகன் ஒருவர், அப்பகுதியில் உள்ள வீதிக்கு அருகே  வெடிக்காத நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று இருப்பதனை கண்டு, அது தொடர்பில் மாமடு பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார்.

இதையடுத்து, விஷேட அதிரடி படையினருடன் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், கைக்குண்டை செயலிழப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .