2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் வங்கியில் பணம் திருட முயற்சி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

க. அகரன்   / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இன்று (11)காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வங்கியின் முகாமையாளர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இரவு குறித்த தனியார் வங்கியிலுள்ள தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்தினை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளதாகவும், எனினும் பணம் திருடவில்லை என்று முறைப்பாடு ஒன்றினை வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் குறித்த வங்கியின் சீசீடிவி கமறாவின் உதவியுடன் திருடர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .