2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாள்வெட்டில் மூவர் படுகாயம்

Editorial   / 2017 ஓகஸ்ட் 06 , பி.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

கிளிநொச்சி  இயக்கச்சி - சங்கத்தார்வயல் பிரதேசத்தில், இன்று (06) பிற்பகல் 2.30 மணியளவில், வாள்வெட்டுக்கு இலக்காகி மூவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ். - பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 19, 25, 35 வயதுடைய மூவரே, இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

குடும்பத் தகராறு காரணமாகவே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .