2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விடுவிக்கப்பட்ட காணியில் கழிவுப் பொருள்கள்

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட திருக்கேதீஸ்வரம், நாவற்குளம் பகுதியில், இராணுவத்தின் வசமிருந்து கடந்த சில வருடங்களுக்கு முன் விடுவிக்கப்பட்ட தனியாருக்குச் சொந்தமான காணியில் தற்போது அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர், இராணுவத்துக்குச் சொந்தமான பல்வேறு கழிவுப்பொருள்களை கொட்டப்பட்டு தீ இட்டு எரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் நாவற்குளத்துக்குச் செல்லும் பிரதான சந்தியில் உள்ள தனியாரின் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் முகாமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், குறித்த தனியாரின் காணிகயில் இருந்து இராணுவத்தினர் சில வருடங்களுக்கு முன் முற்றாக வெளியேறியுள்ளனர்.

எனினும் குறித்த காணி உள்ள இடம்சார்ந்த பகுதிகளில், தொடர்ச்சியாக சட்டவிரோத மண் அகழ்வுகளும் இடம்பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த காணியில் அப்பகுதியில் உள்ள இராணுவ முகாம் மற்றும் இராணுவ கவாலரண்களில் உள்ள இராணுவத்துக்குச் சொந்தமான முழு கழிவுப்பொருள்களும் கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டு எரியூட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இராணுவத்தினர் பயன்படுத்திய உடைகள், தொப்பி, குறிப்பேடுகள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொட்டப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X