2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘விதைநெல்லை மானிய விலைகளில் பெற்றுத்தரவும்’

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 2017, 2018 காலபோகச் செய்கைக்கான விதைநெல்லை, மானிய விலைகளில் பெற்றுத்தருமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இவ்வாண்டு கடும் வரட்சி காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள காலபோக செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன், சிறுபோகச்செய்கையின் போது 3,200 ஏக்கர் நிலப்பரப்பிலேயே சிறுபோகச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதிலும், குடமுறுட்டிக்குளம், இரணைமடுக்குளம் ஆகியவற்றின் நீர் இன்மையால், சிறுபோகச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

“இந்நிலையில், அடுத்து காலபோகச்செய்கைக்கான காலம் அண்மித்துள்ளமையால், பயிர்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகளுக்கு விதைநெல், பாரிய பிரச்சனையாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .