2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் இளம் யுவதி படுகாயம்

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில், சனிக்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில், 22 வயதுடைய யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பரந்தன் வீதியில் இருந்து அதிவேகமாக வந்த சிறியரக கன்டர் வாகனமொன்று, பாதசாரி கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட யுவதியை மோதியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி, தப்பி செல்லமுற்பட்ட வேளையில், அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதன்போது, சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்தில், படுகாயமடைந்த யுவதி புதுக்குடியிருப்பு ஆதார வைததியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,  சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X