Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மார்ச் 05 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி பொதுச் சந்தையின் மரக்கறி வியாபாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சந்தை வியாபாரிகள் இன்று (05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சனிக்கிழமை (03) கிளிநொச்சி பொதுச் சந்தையில் மரக்கறி வியாபாரி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (05) காலை கிளிநொச்சி பொதுச் சந்தை வாயிலை மறித்து வியாபாரிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
“கத்திவெட்டு எம் கலாசாரத்தை சீரழிக்கும், சந்தையின் பாதுகாப்பு யார் கையில், தனிநபர் வாள்வெட்டு தமிழின சாபக்கேடு, வயிற்றுப் பசியை தீர்க்க வந்த நாம் வாள்வெட்டுக்கு இரையாவதா” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் வியாபாரிகள் ஏந்தியிருந்தனர்.
வியாபாரிகளின் போராட்டத்தால், நுகர்வோர், விற்பனையாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 Apr 2024
18 Apr 2024
18 Apr 2024