2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விற்பனை நிலையம் தீக்கிரை

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், ரொமேஸ் மதுசங்க

வவுனியா - பட்டானிசூரில் அமைந்துள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்று, இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம், இன்று (25) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பட்டானிசூர் பிரதான வீதியில் அமைந்துள்ள, தனியாருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமே, இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதனால், 21 மோட்டார் சைக்கிள் முற்றாகவும் பகுதியளிவிலும் சேதமடைந்துள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் எரிந்த நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக, வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரும் தடயவியல் பொலிஸாரும் இணைந்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .