2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

IPL இல் பங்கேற்ற அவுஸ்திரேலிய வீரர்கள் இலங்கைக்கு வரவுள்ளனர்

R.Maheshwary   / 2021 மே 05 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த, அவுஸ்திரேலிய வீரர்களை, மீண்டும் அவர்களது  நாட்டுக்கு  அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, ஐபிஎல் போட்டியில் பங்கேற்ற நிலையில்,  இந்தியாவில் தங்கியிருக்கும் 38 வீரர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளர்களை எதிர்வரும் நாள்களில் இலங்கை அல்லது மாலைத்தீவுக்கு அனுப்புவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாக ச​பை நடவடிக்கை எடுத்துள்ளதாக  அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனத்தின் நிறை​வேற்று முகாமையாளர் நிக் ஷொக்லி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இந்தியா மற்றும்  அவுஸ்திரேலியாவுக்கிடையிலான  நேரடி  விமான சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .