2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மணமகனும் மணமகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்

Nirosh   / 2021 ஜனவரி 23 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.றொசாந்த்)

பருத்தித்துறையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணுக்கு சுகாதார வழிகாட்டல்களின் கீழ் இன்று (23) திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ், பொலிஸாரின் பாதுகாப்புடன் பொதுச் சுகாதார பரிசோதகர் கண்காணிப்பில் அங்குள்ள கோவிலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் அனைவரும்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சுயதனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண் ஒருவருக்கு இன்றைய தினம் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்றைய திருமண நி்கழ்வு தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இதனைத் திருமணமான இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X