2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் இரண்டாவது மரணம் பதிவானது

Nirosh   / 2021 ஜனவரி 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.றொசேரியன் லெம்பேட்)

மன்னார் மாவட்டத்தில் 2ஆவது கொரோனா தொற்று மரணம் நேற்று (22) பதிவாகியுள்ளதாக அம்மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “மன்னார் மாவட்டத்தில் நேற்று(22) மேலும் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 63 வயதடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் விடுதி இலக்கம் 2இல் தங்கியிருந்து பெற்றுவந்தார். குறித்த விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் குறித்த நபர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவருக்கு சடுதியாக நோய் நிலை அதிகரித்தது. மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதனால் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்தார். உயிரிழந்த பின் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக இதுவரையில் மான்னாரில் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஜனவரி முதல் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.““ என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .