2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சாய்ந்தமருதில் அமோக கரட் விளைச்சல்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் மேற்கொண்ட வீட்டுத் தோட்டத்தில் பயிரிடப்பட்ட கரட் பெரும் விளைச்சலை தந்துள்ளது.

மலைநாட்டுப் பகுதியில் இதுவரை காலமும் பயிரிடப்பட்டு வந்த கரட் பயிரை பயிரிடுவதற்கான ஆலோசனை மற்றும் விதைகள் என்பனவற்றை விவசாய திணைக்களத்தினூடாக பெற்று அதற்கான சூழலை சாய்ந்தமருது விவசாய போதனாசிரியர் எம்.எம்.எம்.ஜெமீல் வழங்கியிருந்தார்.

ஏற்கனவே காளான் செய்கையில் வெற்றி கண்ட சாய்ந்தமருது பிரதேச வீட்டுத்தோட்ட முயற்சியாளர்கள் தற்போது உருளைக்கிழங்கு செய்கையிலும் மலைநாட்டு பழச்செய்கையிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இவ்வீட்டுத் தோட்ட செய்கையில் பெருமளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றமை விஷேடஅம்சமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .