2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கட்டுத்துப்பாக்கி வைத்திருந்தவருக்கு பிணை

Suganthini Ratnam   / 2016 ஜூலை 21 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, கோமாரிப் பிரதேசத்தில் கட்டுத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன், நேற்றுப் புதன்கிழமை விடுவித்துள்ளார்.

அத்துடன், இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நபர் கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக  பொலிஸாருக்குக் கிடைத்த  தகவலையடுத்து நேற்றுப் புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .