2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'சிறுவர் சமுதாயத்தைப் பேணுவோம்' எனும் தொனிப்பொருளில் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 10 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

'சிறுவர் சமுதாயத்தைப் பேணுவோம்' எனும் தொனிப்பொருளில் பெரிய நீலாவணை கிராமிய சிறுவர் கண்காணிப்பு குழுவும் பாரதியார் இளைஞர் கழகமும் இந்து அரசசார்பற்ற நிறுவனமான டெரஸ் ஹோமின் அனுசரணையில் பெரிய நீலாவனை விஷ்னு மகாவித்தியாலயத்தில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.

பாடசாலை அதிபர் திருமதி நற்குணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் டெரஸ் ஹோமின் மட்டக்களப்பு அம்பாறை இணைப்பாளர் ஏ.தாஷன், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.ரதன், நிறுவனங்களுக்கான உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான், திட்ட முகாமையாளர் ஆர்.சிவபதிஸ் உட்பட ஊரின் பல பிரமுகர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .