2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருதில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு கிராமிய மக்கள் ஒன்றுகூடலும், நடமாடும் சேவையும் எதிர்வரும் சனிக்கிழமை (05) சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள நடமாடும் சேவையில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்தி குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிற்கான 'கிராமிய மக்கள் ஒன்றுகூடலும், நடமாடும் சேவையும்' அதே தினமான சனிக்கிழமை (05) சாளம்பைக்கேணி  அல்-சிராஜ்; மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் எஸ்.கரன் தலைமையில் நடைபெறவுள்ள நடமாடும் சேவை நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

இதன்போது காணி, வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல், வடிகாலமைப்பு, நீர்ப்பாசனம், சமூர்த்தி, புவிச் சரிதவியல் திணைக்களம், மின்சாரம், கால் நடை, பொலிஸ், வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சமூகசேவை, கலாச்சாரம், மீன்பிடி, மலேரியா ஒழிப்பு போன்ற பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த துறை சார்ந்த அதிகாரிகளினால் மக்களின் பிரச்சினைகள் இனங்கானப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளும் வழங்கப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X