2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வாய்ப்புக் கிடைக்காததால் உயிரை மாய்த்த பிரபல இளம் நடிகர்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 24 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல தெலுங்கு நடிகரான  ‘சுதீர் வர்மா ‘இன்று காலை(24)   விசாகப்பட்டினத்தில் உள்ள தனது  வீட்டில் வைத்து, தனது  உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

அவரது மரணமானது  ரசிகர்கள் மற்றும் தெலுங்குத்  திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

33 வயதான சுதீர் வர்மா ‘குண்டனபு பொம்மா, நீக்கு நாகு டேஷ் டாஷ் மற்றும் செகண்ட் ஹேண்ட் ‘ போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் விசாரணையில் அவர் ‘திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் அண்மைக்காலமாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார்” எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவரது ரசிகர்களும், திரையுலக நட்சத்திரங்களும் அவரது குடும்பத்தினருக்கு தமது  இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X