2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

30,000 பல்கலைக்கழக மாணவர்களின் தகவல்கள் திருட்டு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 24 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவில் உள்ள கண்ணூர்  பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சுமார் 30,000 மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பல்கலைக் கழகத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற  மாணவர்களின் தகவல்களே இவ்வாறு  திருடப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் திருடப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் 'டார்க் வெப்' எனப்படும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனை கொச்சியில் உள்ள தனியார் சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி கண்டறிந்துள்ளது.

இந்நிலையில் பல்கலைக்கழக இணையதளத்தில் ஏற்பட்ட பிழையின் காரணமாக இத்தகவல் திருட்டு நடைபெற்று இருக்கலாம் என குறித்த பல்கலைக்கழக நிர்வாகம்  தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .