2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆப்கானிஸ்தானில் தற்கொலை தாக்குதல்; 10 பேர் பலி

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தென்பகுதியான ஹெல்மன்ட் மாகாணத்திலுல்ல ஜெரிஷ் மாவட்டத்திலேயே இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இராணுவ வாகனத் தொடரணியை இலக்குவைத்து மோட்டார்சைக்கிளில் வந்தவரால் இந்தக் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஹொஸ்ற் மாகாணத்தில் இடம்பெற்ற மற்றுமொரு குண்டுத் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .