2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சூடானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒமர் அல் பஷிர் வெற்றி

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூடானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சூடான் நாட்டு ஜனாதிபதி ஒமர் அல் பஷிர் வெற்றிபெற்றுள்ளார்.

ஒமர் அல் பஷிர் 68 சதவீதமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக சூடான் நாட்டுத் தேர்தல் ஆணையகம் தெரிவித்தது.

சூடான் நாட்டில் கடந்த 11ஆம் திகதி இடம்பெற்றிருந்த நாடாளுமன்றத் தேர்தலில், 16,000 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

கடந்த 24 வருடங்களில் சூடானில் பல கட்சிகள் போட்டியிடுகின்ற முதலாவது தேர்தல் இதுவாகும். வட சூடான் மற்றும் தென் சூடான் பிராந்தியங்களுக்கு இடையிலான உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்த சமாதான உடன்படிக்கையொன்றின் அங்கமாகவே இந்தத் தேர்தல் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை, தார்பூர் சம்பவம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களை ஒமர் அல் பஷிர் எதிர்நோக்குவதாக குறிப்பிடப்படுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்துள்ளார்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .