2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பெரு நாட்டில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 38பேர் பலி;50பேர் காயம்

Super User   / 2010 பெப்ரவரி 23 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரு நாட்டில் நேற்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பஸ்கள் ஒன்றுடனொன்று மோதிக்கொண்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக பெரு நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெரு நாட்டின் தலைநகர் லிமாவிலிருந்து 500 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பானமெரிக்கன் பெருந்தெருவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதிகளை புனரமைப்பதற்காக பெரு நாடு இந்த வருட முற்பகுதியில் உலக வங்கியிடமிருந்து 150 அமெரிக்க டொலர்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X