2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இறந்தபின் மீண்டும் உயிர்பெற முடிவு

Ilango Bharathy   / 2023 மே 10 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வகையிலான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற நம்பிக்கையில், அமெரிக்காவிலுள்ள அல்கார் என்ற அமைப்பு இறந்து போன மனித உடல்களையும் விலங்குகளின் உடல்களையும் கிரையோனிக்ஸ் என்ற முறையில் உறைநிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறது.

இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் பிரபல மின்னணு வணிக நிறுவனமான பே பால் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பீட்டர் தீல்ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, தாமும் அந்த நிறுவனத்தில் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .