2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வியட்னாம் பயணமாகும் இலங்கை கனிஸ்ட பெண்கள் கரப்பந்தாட்ட அணி

Super User   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt(நவம்)

இலங்கை கனிஸ்ட பெண்கள் கரப்பந்தாட்ட அணி 15 ஆவது ஆசிய பெண்கள் கரப்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வியட்னாமிற்கு பயணத்தை மேற்கொள்வுள்ளது.

இந்த அணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் 19 வயதுப் பிரிவு மாணவியான பாலச்சந்திரன் புகழரசி என்ற மாணவியும் இடம் பெற்றுள்ளார்.

இந்த அணியில் இடம் பிடித்துள்ள முதலாவது தமிழ் வீராங்கனையாக புகழரசி காணப்படுகின்றார்.

கடந்த காலத்தில் குறிப்பாக 15 வயதுப் பிரிவில் கல்லூரி அணியில் இடம்பெற்ற இவரும் இவருடைய சகோதரியும்  தேசிய அணிக்கான பயிற்சி முகாமில் இடம்பெற்ற போதிலும் இறுதித் தெரிவில் புகழரசி மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் இன்று இரவு வியட்னாமிற்கு பயணத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .