2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அகில இலங்கை கால்பந்தாட்டச் சங்க கால்பந்தாட்ட போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகம் வெற்ற

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)                   

அகில இலங்கை கால்பந்தாட்டச் சங்கம் நடத்திய பிரிமியர் லீக் டிவிசன் 2 கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக் கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சீ.ஆர்.அன்ட் எப்.ஸி மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப்போட்டியின்போது களுத்துறை சுப்பர்பீச் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்தாடிய கல்முனை பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் 5 – 4 என்ற கோல் அடிப்படையில் வெற்றிபெற்றது.


பிரிலியன்ட் விளையாட்டுக்கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டதுடன,; பிரிமியர் லீக் வெற்றிக்கிண்ணமும் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டன.


அம்பாறை மாவட்ட கால்பந்தாட்டத்துறை வரலாற்றில் கல்முனையைச் சேர்ந்த விளையாட்டுக்கழகமொன்று தேசிய ரீதியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
 


You May Also Like

  Comments - 0

  • Nafar Saturday, 06 November 2010 08:44 PM

    மிகவும் பெருமையாக இருக்கிறது. கல்முனை பிரிலியன் இற்கு நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .